தேடலில் தொடங்கியது

எனை நானறியும்
தேடலில்
உனைத் தேடி
வந்தேன்
தொலைந்துப் போவேன்
என்று அறியாமல்

வானவில் நிறங்கள்
கசந்து
உன் பச்சை நிறம்
போற்றிக்
கொள்ளும் ஆவளில்
வந்தேன்
நிறமற்றுப் போவேன்
என்று அறியாமல்

மலைக் காதலன்
கவிக் கேட்கவே
நானும் மைல் பல
கடந்து வந்தேன்
அவன் எனை மடி மீது
அமர்த்தியே தாலாட்டி
பின் நிரந்தர நித்திரை
கொடுப்பான் என்று அறியாமல்

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!