Posts

Showing posts from April, 2018

நான் சேமித்த அவன்

Image
அவன், எனை கடக்கையில் காணாது செல்வான் பின் பத்தடி கடந்து திரும்பி ஓர் குழந்தையின் சிரிப்பை காற்றில் மிதக்க விட்டு செல்வான் கண் கொட்டாமல் நான் அவனை காண்பதை கண்டு! அது அன்பின் புன்னகையோ, அலட்சியப் புன்னகையோ ஆராய்ச்சி எதற்கு? என் கடைமை அவைகளை சேமிப்பதே இதோ இன்னுமோர் புன்னகையை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேன் அவன் சட்டையின் நிறம் பார்த்து என் மூளையில் ஏற்றிக் கொள்வது என் பொழுதுப் போக்கு தினமும் உடை அணியும் போதெல்லாம் அவன் சட்டை வண்ணம் எண்ணிப் பார்த்து பல கணிப்பு நெறிகளை இட்டு அணிவதே வழக்கம் என்றோ ஓர் நாள் எங்கள் இருவரின் உடை நிறம் பொருந்திவிட்டால் வானுக்கும் பூமிக்கும் குதித்து அந்த நாளையும் நிறத்தையும் சேமித்து வைத்துக் கொள்வேன் அவன், அறிந்து இருக்க வாய்ப்பில்லை அவனுடைய கடிகாரம் என் கையாள் என்று அவன் நாள் முழுதும் எனக்கு அத்துப்படி என்று அட்டவணைப் போட்டு சேமித்து வைத்துக் கொண்டேன் அவன் பேசும் வார்த்தைகளைக் கேட்கவே அவன் நண்பன் ஒருவனை நண்பனாக்கிக் கொண்டேன் ஆனால் கள்ளன் அவனோ எனை விடுத்து அனைவரிடமும் பேசுவான் யாரிடம் பேசினால் என்ன என் கடமை அவன் ...

இந்தக் கதை தெரியுமா உங்களுக்கு?

Image
அவள், மயிலிறகு குட்டிப் போடும் என்பாள் அவன், பென்சில் சீவீ தூள் கொடுப்பான் அவள், கண்ணாமூச்சி ஆடலாம் வா என்பாள் அவன், அவள் கண் முன்னே ஒளிந்துக் கொள்வான் அவள், மழையில் கப்பல் விடலாம் என்பாள் அவன், அவளுக்கு வாழையிலை வைத்துக் குடை பிடிப்பான் அவள், கலர் கோழி வளர்த்தாள் அவன், கழுகோட்டினான் அவள், கொட்டாங்குச்சி வைத்து சோறாக்கினாள் அவன், அவள் உண்ட மிச்சம் உண்டான் அவள், புளியங்காய் தின்ன அவன் மரமேறுவான்.. அவள், நதியில் குளிக்க அவன், மீன்களின் கண் மூடுவான் இப்படி அப்படியாக அவன் அவளுக்காக அன்பை பொழிய அது எளிமையாகவும் அழகாகவும் அந்த தேசமெல்லாம் வழிந்தோடியது... அதுவே பின்னோர் காலத்தில் யமுனா என்றழைக்கப் பட்டதாகவும் அங்கே அவர்களுக்காக ஒரு காதல் சின்னம் நிறுவப்பட்டதாகவும் ஒரு வரலாறு!!! 😉 #புனைவு - ஹேமா

தேடலில் தொடங்கியது

எனை நானறியும் தேடலில் உனைத் தேடி வந்தேன் தொலைந்துப் போவேன் என்று அறியாமல் வானவில் நிறங்கள் கசந்து உன் பச்சை நிறம் போற்றிக் கொள்ளும் ஆவளில் வந்தேன் நிறமற்றுப் போவேன் என்று அறியாமல் மலைக் காதலன் கவிக் கேட்கவே நானும் மைல் பல கடந்து வந்தேன் அவன் எனை மடி மீது அமர்த்தியே தாலாட்டி பின் நிரந்தர நித்திரை கொடுப்பான் என்று அறியாமல்

கடவுளின் தற்கொலை

Image
நான் கண்களை மூடிக் கொண்டேன் குருதி சிதறி அழியாதிருக்கும் இவ்வண்ணம் பிடிக்கவில்லை என்று... நாசி தூவாரம் ஏறி வரும் பச்சிள ரத்த வாடை உமிழ் நீர் முழுங்குகையில் என்னில் கலந்து என்னை அழித்து விடுமோ!! குருடனாய் இருப்பதற்கு அடைத்து விட்டேன் நாசி கதவிரண்டையும் கூக்குரலாய் கேட்கின்றது கதறி அழும் அக்குரலின் ஒலி.. புலம்பல்களுக்கும் பிராத்தனைகளுக்கும் பஞ்சமேதுமில்லை இவ்வோசைகள் என் நெஞ்சைக் கிழித்து விடுமோ? எதற்கு வம்பென மடல் சன்னல் இரண்டையும் மூடிவிட்டேன்.. கரங்களை முட்டுக் கொடுத்து... கண் மூடி காதடைத்த போதும் வாய் துடித்தது "போதும் நிறுத்துங்கள் மாந்தர்களே!" என்றோங்கி உரைக்க... அப்படி நடந்தால் நான் வெறும் கல் அல்ல கடவுள் என்றுணர்ந்து எனை கொன்று விடுவார்களோ? வார்த்தைகளைக் கொன்று வாயடைத்தேன்... சிலையான நான் சிலை போல் நிற்பினும் பதை பதைத்த என் இதயம் மட்டும் இருந்தென்ன செய்ய இருப்பது ஒரு அரக்கன் எனில் வதம் செய்யலாம் எண்ணிக்கை அளவிழந்ததால் நான் எனையே வதம் செய்கிறேன்... போய் வருகிறேன் மனிதா! புதியதோர் உலகம் பிறந்தால் சற்றென்னைத் தட்டி எழ...

என்றோ பெய்த மழை

Image
முன் என்றோ பெய்த மழை இன்றும் நனைக்கின்றது என்னை அன்று மேகமும் இடிக்க மறுத்து தென்றலை தூது விட்டது மழைச் சாரலில் நாம் இன்னும் சற்று கதைப் பேச கதைகளும் கனுவுகளும் மழை இரவை களவாடின மழை தொலைத்தக் காலையில் மரத்தடியில் கிளைகளைக் குலுக்கி குளியலாடினோம் நம் காதல் சற்றுக் கரைந்து வேரோடியதால்... மரமோ...! சாகா வரம் பெற்றது பின் என்ன கதிரவன் உடுத்தி கைவிரல்கள் பிடித்து நாம் ஓடினோம் இன்னும் வராத இன்னொரு மழை இரவை நோக்கி

துறவி இலைகளே

Image
பச்சை துறந்து காவி பூசிய துறவி இலைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் தவக்கோலமெய்தி இப்படி அசைந்திடா நீண்டதோர் நித்திரையிட கற்று தந்ததாரோ துறவி இலைகளே? காற்றுக்கு நெளிந்து வழி கொடுத்தாய் கதிர் ஒளி பாயப் பொத்தல் காது கொடுத்ததாய் மிதித்துடும் மாக்கள் மற்றும் மக்களுக்கு உடலை மடிந்துக் இடம் கொடுத்ததாய் இப்படி தன்னலமற்று வாழக் கற்றுக் தந்ததாரோ துறவி இலைகளே? வழிப்போக்கன் நான் உன் தவக் கோலம் பார்த்து மதி மயங்கிய சிறு வழிப் போக்கன் நான் உனை ஒரு கணம் உற்று பார்த்து வழிப்பாதை தனில் வாழ்க்கை புரிந்த வழிப்போக்கன் நான் "துயரப் புயலோ,கோப வெயிலோ நீ நின் நிலை மாறாதிருந்தால் நிலைத்திருப்பாய்" மௌன மொழியில் உரைத்தமைக்கு நன்றிகள் பல துறவி இலைகளே..