Posts

Showing posts from May, 2018

மூங்கில் காடு

Image
ஓங்கி வளர்ந்திருக்கும் புல்லாங்குழல் உலகம் அந்தப் புற்களின் பச்சை உடுத்தி ஓடுகிறாள் ஒவ்வொரு அசைவிலும் இன்னிசை மீட்டுகிறாள் என் கைப்பிடித்து இழுத்துப் போகிறாள் அவள் பாதம் பட்டு சறுகுகள் உடையவில்லை மூங்கில் உதிர்த்தது பச்சை இலைகளை அவள் மென்மை பாதம் பட கிளைகளும் வளைந்து அவள் கேசம் தொட முயற்சித்து என் கூந்தல் கோதிச் சென்றது நான் கிளை கை பிடித்து ஊஞ்சலாடினேன் விட்டு விடவில்லை அவள் திரும்ப வந்து கைக்கோர்த்துக் கொண்டாள் தூரத்துப் பறவை காட்டும் ஆசை காட்டி இருவரும் ஓடினோம் ஒற்றையடிப் பாதையிலே இப்பொழுது அவளை விட என் கால்கள் வேகம் எடுக்கத் தொடங்கின கதிரவன் கைத்தட்டல் இலைப் போர்வையின் ஓட்டை வழி ஒளித்தது ஒளி கண் கூச கண்மூடினேன் ஒரு வினாடியில் அவள் மறைந்துவிட்டாள் காடு முடிந்துவிட்டது என் கால்கள் மட்டும் வந்த வழியிலே திரும்பி ஓடிக் கொண்டே இருக்கிறது அந்த முடிவில்லா மூங்கில் காட்டில் ஓடிக் கொண்டே இருக்கும், இயற்கைத் தோழியின் மேல் இருக்கும் காதல் தீரும் வரை.... அவள் திரும்ப வந்து என் கைப்பிடிக்கும் வரை...

திண்ணை வைத்த வீடு

"மறதி எனும் கொடிய வியாதி எனைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்ள சிறிது சிறிதாய் சிதைந்து கொண்டும் மண்ணில் புதைந்து கொண்டும் இருக்கிறேன் இதோ காலன் வரும் சத்தம் அவன் வருவதற்குள் என் கதை சொல்கிறேன்", என்றார் அவர் கதை கேளு பெண்ணே கதை கேளு மாட மாளிகையா கூரை கொட்டகையோ நானின்றி அவையில்லை அந்தக் காலத்திலே அவ்வளவு காதல் இருவருக்கும் எனைக் கட்டி அணைத்து உறங்கிப் போவர் சிலர் பஞ்சு மெத்தை விடுத்தே என் மடித் தேடி இளைப்பாறி செல்வர் சிலர் என்மேல் அவர்கள் பாரத்தை இரக்கி வைத்தே நிம்மதி அடைவர் பலர் நட்பின் இலக்கணம் நாங்கள் தெருக் குழந்தைகளுக்கோ என்மேல் கொள்ளை விருப்பம் எப்போதும் வந்து ஒட்டிக் கொள்வர் என் கைக்கோர்த்து சுற்றி வருவர் என் முகத்தில் கட்டமிட்டு என் கைகளில் கல் வைத்து எனப் பல விளையாட்டு விளையாடி மகிழ்வோம் மங்கையர்களோ என்னை அவர்கள் குழந்தையென தினமும் குளிப்பாட்டி சித்திரமிட்டு பலக் கதைப் பேசி மகிழ்வர் ஊரில் நடக்கும் அத்தனைக் கதைகளும் முதலில் என் காதிற்கே அது ஒருக்காலம் பெண்ணே நானின்றி வீடில்லை ஆனால் நவீன மாந்தர்களோ என் காதலியை என்னிடம்...